முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Monday, July 27, 2009

பிரசாரத்திற்கு அதிமுக தலைவர்களை அழைக்க மாட்டோம்- தா.பாண்டியன்



கோவை: இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுக தலைவர்களை அழைக்க மாட்டோம். தனித்தே செயல்படுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நடந்த சிபிஐ மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாண்டியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் நடைபெறும் 5 சட்டசபை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஒரு தொகதியை ஆதரவு கட்சிக்கு விட்டுக்கொடுக்கின்றோம்.

இடது சாரிகள் கருத்தை ஆதரிக்கின்ற பார்வர்டு பிளாக் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் இறங்கியுள்ளோம்.

ஆளுங்கட்சி செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

பர்கூர் தொகுதிக்கு நாளை (இன்று) வேட்பாளரை அறிவிக்கிறோம். இடைத்தேர்தலில் .தி.மு..வினர் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். .தி.மு..வினருக்கும் எங்களுக்கும் இடையே முரண்பாடு எதுவும் இல்லை.

இடைத் தேர்தல் பிரசாரத்தை இடதுசாரிகள் தனித்தே மேற்கொள்வார்கள், தனித்தே செயல்படுவார்கள். அதிமுக தலைவர்களை பிரசாரத்திற்கு அழைக்க மாட்டோம் என்றார் தா.பாண்டியன்.

No comments:

Post a Comment